10.17.2010

Nine Unknown Men


வருடம்: 2005
இடம்: ஒரு கல்லூரி மாணவர் விடுதி.

          என் நண்பனின் அறையில் ஒரு நாவலை கண்டெடுத்தேன். பள்ளி பாடப்புத்தகம் மட்டுமே அதுவரை படித்து இருந்த எனக்கு, நாவல்கள் ஒரு புது அனுபவமாக, உலகமாகவே தெரிந்தது. நாவல்களை கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்ய வேண்டாம்; இதில் இருந்து எந்த கேள்வியும் கேட்கமாட்டார்கள்; ஒரே இரவில் 3 chapters முடிக்க வேண்டும் என்ற எந்த அவசரமும் இல்லை; இதுப்போன்ற பல விதி விளக்குகளுக்காகவே எனக்கு அப்படி தோன்றி இருக்க வேண்டும்.

        அப்படி நான் கண்டெடுத்த ஒரு நாவல், எனக்கு பல சுவாரஸ்யமான தகவல்களையும், அந்த தகவல்களைப் பற்றி ஆராயவும் வைத்தது. அந்த தகவல்கள் நம்பத்தகுந்ததா என்று தெரியவில்லை. ஆனாலும், Superman, spiderman comics படிக்கும் போது ஒரு குழந்தைக்கு இருக்கும் ஆர்வமும் உற்சாகமும்மே எனக்கு இருந்தது, இன்னும் இருக்கிறது. அந்த நாவலின் பெயர் "Angels and demons". எழுதியவர் டேன் பிரவுன். என்னை ஈர்த்த விஷயம் இலுமினடி ("illuminati", a secret society). எனக்கு மிகவும் பிடித்த நாவல் ஆசிரியர் இவர். இவரின் படைப்புகள் அனைத்திலும் பல சுவாரஸ்யமான தகவல்கள் நிறைந்து இருக்கும். 

          இலுமினடி பற்றி படிக்க ஆரம்பித்த எனக்கு, அதன்மூலம் பல secret societies (Knights templer, Free masonary, Priory of Sion, Trilateral Committee, Bilderbergs, etc etc) அறிமுகம் ஆனது. இவை அனைத்தை பற்றியும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். அயல் நாட்டில் இவ்வளவு secret societies இருக்க, அவர்களை காட்டிலும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்திலும் தலை சிறந்து விளங்கிய நம் பாரத பூமியில் அப்படி பட்ட அமைப்பு ஒன்று கூட இல்லையா என்று எனக்குள் எழுந்த வினாவுக்கு விடையாக வந்ததே "Nine Unknown Men". இதைப்பற்றி பல பேர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அமைப்பை பற்றியே எனக்கு தெரிந்த விஷயங்களை என் பலகையில் பதிவு செய்யப்போகிறேன். 

          மாவீரன் அலெக்சாண்டர்க்கு அடுத்து வரலாற்று ஆர்வலர்களால் அதிகம் போற்றப்படுவது மௌர்யா வம்சத்தை நிறுவிய சந்திரகுப்தரின் பேரனான பேரரசர் அசோகரையே. வடக்கே இன்றைய ஆப்கானிஸ்தான் தொடங்கி, கிழக்கே பங்களாதேஷ், அசாம் வரையிலும், தெற்க்கே  அந்தரா, கேரளா வரையிலும் பறந்து விரிந்து இருந்த மௌர்யா சாம்ராஜ்யத்தை  பேரரசர் அசோகர் கி.மு. 269 முதல் கி.மு. 232 வரை ஆட்சி செய்தார். 

          இவர் ஆட்சியில் நடந்த கலிங்கப் போரை யாராலும் மறக்க முடியாது. ஏறக்குறைய கி.மு.260- ல், கலிங்க நாட்டுக்கும் (இன்றைய ஒரிசா மாநிலம்) அசோகருக்கும் இடையே நடந்த போரே கலிங்கப் போர் ஆகும்.  பல போர்களை கண்டு வெற்றி வாகை சூடிய அசோகரே, கலிங்க போரின் முடிவில், இனி போரே வேண்டாம் என்று அஹிம்சையை நாடி புத்த மதத்தை தழுவியதன் மூலம், கலிங்கப் போர் எவ்வளவு கொடூரமானதாகவும் பயங்கரமானதாகவும் இருந்து இருக்க வேண்டும் என்று நம்மால் உணர முடிகிறது. இந்தப்போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் உயிர் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



          இந்தப்போர் அசோகரை புத்த மதத்திற்கு மட்டும் மாற வைக்கவில்லை, அவரை ஒரு ரகசிய அமைப்பையும் உருவாக்கவைத்தது. அந்த ரகசிய அமைப்பின் பெயரே "Nine Unknown Men". இந்த அமைப்பே உலகின் மிகவும் பழமையான ரகசிய அமைப்பு என்று கூறப்படுகிறது. கலிங்கப்போரில் நடந்த உயிர் சேதத்திற்கு மனிதனின் அறிவே காரணம் என்றும், இது போன்ற மனித இனத்துக்கு தீங்குவிளைவிக்க கூடிய அறிவு சாமான்ய மனிதனும் அறிந்து இருந்தால், விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்றும் அசோகர் நம்பினார். இந்த அறிவை பாதுகாக்க அவர் அமைத்த அமைப்பே "Nine Unknown men" என்கின்ற ரகசிய அமைப்பு. இந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

          பின்னாளில், அறிவை பாதுகாப்பது மட்டும்மல்லாமல், அவரவர் துறைகளில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்து அதை வளர்க்கவும், தங்கள் மரணத்துக்கு பிறகு அந்த துறையை வளர்க்க ஒரு சீடரை உருவாக்கவும்   ஆணை இடப்பட்டது. அசோகர் வகுத்த அந்த 9 துறைகளுமே, தீயவர் கைகளில் கிடைத்தால் பேராபத்து விளைவிக்க கூடியவையே. அந்த துறைகள் பின் வருமாறு.

1) Propaganda & Psycological Warfare:
                              உலகிலேயே மிகவும் ஆபத்தான அறிவியல் இதுதான். இதை சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மூலைச்சலவை செய்வது. இந்த அறிவியலில் தேர்ந்தவர்கள் யாராயினும் அவர்களால் ஒரு நாட்டையே தங்கள் பேச்சாற்றலால் மயக்கி ஆள முடியும். இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம், அடோல்ப் ஹிட்லர். 

2) Physiology:
                              ஒரு உயிரினத்தின் உறுப்புகள் இயங்கும் முறை பற்றிய அறிவியல் துறைக்கு Physiology என்று பெயர். இந்த அமைப்பால், இந்த துறையில் செய்து வரும் ( வரும்!!!, ஆம், இந்த அமைப்பு இன்றும் செயல் படுகிறது என்றே நம்பப்படுகிறது. ) ஆராய்ச்சி "touch to death". அதாவது, நரம்பு மண்டலத்தை தாக்கி எப்படி ஒருவரை அழிக்கமுடியும் என்பதுதான். 
உலக புகழ்பெற்ற ஜூடோ கலையை வளர்த்தது இவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.

3) Microbiology:
                            மூன்றாவது துறை நுண்ணுயிரியல்( மொழிப்பெயர்ப்பு சரி என்று நினைக்கிறேன். ).   கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிர்களால் மனிதனுக்கு உள்ள நன்மைகளும் தீமைகளும் பற்றி ஆராய்வதே இந்தத்துறை.
                            
4) Alchemy:
                            மனிதனின் பேராசைக்கு எடுத்துக்காட்டு இந்த துறை. எந்த உலோகமானாலும் அதை தங்கமாய் மாற்ற உலகின் அனைத்து மூளை முடுக்குகளிலும் ஆராய்ச்சி பண்டைய காலங்களில் இருந்தே நடைபெற்று வருகிறது. இந்த அறிவியல் துறைக்கே Alchemy என்று பெயர். 

5) Communication:
                            இந்த துறையை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. இன்று அசுர வளர்ச்சி அடைந்து இருக்கும் ஒரு அறிவியல் துறை இது. அசோகர் அமைத்த ரகசிய அமைப்பு, வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ளுவது எப்படி என்றும் ஆராய்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

6) Gravitation:
                           விமானங்கள் செய்வது எப்படி என்று ஆராய்வதே இந்த துறை. 2200 ஆண்டுகளுக்கு முன்னரே விமான ஆராய்ச்சியா என்று கேட்பவர்களும் உள்ளனர். ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் கடத்தி சென்றதாக ராமாயணத்தில் குறிப்பு உள்ளது. ராமாயணம் கதையாகவே வைத்துகொண்டாலும், விமானம் என்ற ஒரு concept-ஐ   பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே முன் வைத்தவர்கள் நம் இந்தியர்கள்.

7) Cosmology:
                            Universe பற்றியும், கிரகம் விட்டு கிரகம் அதிவேகத்தில் செல்லவது பற்றியும் இதில் ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

8) Light:
                            ஒளி பற்றிய துறையே இது. ஒளியின் வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது எப்படி, ஒளியை ஆயுதமாக பயன்படுத்துவது எப்படி என்று இந்த துறையை சேர்ந்தவருக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது. 

9) Sociology:
                            சமுகம் பற்றியும் அது உருவாவது எப்படி, வீழ்வது எப்படி போன்றவற்றை ஆராயும் துறை இது.

          இந்த ரகசிய அமைப்பு, பெயருக்கு ஏற்றார் போல், மிகவும் ரகசியமானது. இதில் இருக்கும் ஒன்பது பேருக்குமே கூட ஒருவரை ஒருவர் தெரியாது என்றும் கூறப்படுகிறது. இப்படிபட்ட இந்த ரகசிய அமைப்பை பற்றி முதலில் எழுதியவர் தல்போட் முண்டி என்ற ஆங்கில நாவலாசிரியர். இவர் 25 ஆண்டுகள் ப்ரிடிஷின் இந்திய ஆட்சியின் போது இங்கே காவல் துறை அதிகாரியாய் பணியாற்றியவர். இவர் எழுதிய "The Nine Unknown"  என்ற நாவலில் தான் முதன் முதலில் இந்த ரகசிய அமைப்பு பற்றிய தகவல் வெளியானது. பின் 1960-ல்  வெளியான Louis Pauwels and Jacques Bergier எழுதிய  "The Morning of the Magicians" என்ற நாவலில், 1860-ல் இந்தியாவில் பணிபுரிந்த Louis Jacolliot என்ற ஒரு பிரெஞ்சு நாட்டு நீதிபதி இந்த ரகசிய அமைப்பை பற்றி அறிந்திருந்தார் என்று கூறுகின்றனர். இவர்கள் இதில் குறிப்பிட்டு இருக்கும் மற்றும் ஒரு தகவல் நம்மை ஆச்சர்யம் அடைய செய்கின்றது. 

          கி.பி 946-ல் பிறந்த Gerbert d'Aurillac, ஒரு பிரெஞ்ச்காரர். இவர் கி.பி 999-ல் இருந்து 1003 வரை போப் Sylvester II ஆக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் இந்த ரகசிய அமைப்புக்கும் தொடர்பு இருந்ததாகவும், இவரிடம் ஒரு வெண்கல மண்டையோடு இருந்ததாகவும், அது நாம் கேட்க்கும் கேள்விகளுக்கு "ஆம்" "இல்லை" என்று பதில் சொல்லும் எனவும் கூறுகின்றனர் (இதை இன்றைய boolean system ஓடு ஒப்பிடலாம்). இந்த மண்டையோட்டை இவர்க்கு அளித்தது இந்த ரகசிய அமைப்பின் ஒரு உறுப்பினரே ஆவார். இந்த மண்டையோட்டை இவர் இறந்ததும் சர்ச் ஊழியர்கள் அழித்துவிட்டனர் என்றும் கூறுகின்றனர். போப் Sylvester II- கு வானவியலிலும், கணிதத்திலும் மிகுந்த ஆர்வம் உண்டு. இந்த ஆர்வத்தினாலேயே இவரை பற்றி பல வதந்தில்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பரவி இருக்கிறது. அதில் ஒரு வதந்தி, இவர் சாத்தானின் தூதுவன் என்பதும் கூட. ஐரோப்பவாக்கு "abacus" ஐ அறிமுகம் செய்த பெருமை இவரையே சாரும்.

          இவர் வைத்திருந்த மண்டையோட்டை பற்றி 1954- ல் அக்டோபர் மாதம் வெளியான cybernetics journal- ல் பின் வருமாறு குறிபிடப்பட்டுள்ளது. 
"We must suppose that he (Sylvester) was possessed of extraordinary knowledge and the most remarkable mechanical skill and inventiveness. This speaking head must have been fashioned 'under a certain conjunction of stars occring at the exact moment when all the planets were starting on their courses.' Neither the past, nor the present nor the future entered into it, since this invention apparently far exceeded in its scope its rival, the perverse 'mirror on the wall' of the Queen, the precursor of our modern electronic brain. Naturally it was widely asserted that Gerbert was only able to produce such a machine head because he was in league with the Devil and had sworn eternal allegiance to him."

          இந்த ரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள் மனிதர்களுடன் பழகுவதில்லை. அறிவியல் நன்கு அறிந்தவர்கள், மக்களுக்கு நன்மை செய்ய கூடியவர்கள் என்று இவர்கள் யாரை நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே இவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். 
நம் நாட்டின் சிறந்த அறிவியல் வல்லுனரான திரு. ஜகதீஷ் சந்திர போஸ், இந்த ரகசிய அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்றும் அவரே அதன் ஒரு உறுப்பினர் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதேபோல் சார்.சி.வி.ராமன், விக்ரம் சாராபாய் அவர்களைப்பற்றியும் நம்பப்படுகிறது.

          நம் அனைவருக்கும் Louis Pasteur -ஐ நன்கு தெரியும் என்று நினைக்கிறேன். இவர் பல நோய்களுக்கு தடுப்பு ஊசியை கண்டுபிடித்தவர்.  குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் cholera,anthrax,rabies போன்ற கொடிய நோய்களுக்கு vaccines எனப்படும் தடுப்பு ஊசியை கண்டுபிடித்தவர் இவரே. இவரின் சோதனை கூடத்துக்கும் இந்த ரகசிய அமைப்புக்கும் தொடர்பு இருக்கிறது என்று Louis Jacolliot கூறுகின்றார். இவர் மேலும் கங்கையின் புனித தன்மைக்கு காரணமும் இவர்களே என்கிறார். இந்த புனித தன்மை இயற்க்கை என்றால் அது ஏன் பிறகு அமேசான், நைல் போன்ற மற்ற எந்த நதிகளிலும் இல்லை என்றும் கேள்வி எழுப்புகிறார். இவர் கங்கை நதியின் நோய் தடுப்பு சக்திக்கான காரணம், "sterlization by radiation" என்கிறார். அதாவது கதிர் வீச்சு. மேலும் அந்த கதிர் வீச்சு ஒரு வகை நுன்னுயிரான "Bacteriophage" உடன் கலந்து ஹிமயமலையில் இருந்து விடப்படுகின்றது என்றும் கூறுகிறார். நவீன ஆராச்சியும் கங்கையின் மருத்துவ குணத்திற்கு அதில் இருக்கும் நுன்னுயிரியே காரணம் என்று கண்டுபிடித்து இருக்கிறது.

          Theosophical Society- ஐ ஆரம்பித்த Madame Blatvatsky- ம் இந்த ரகசிய அமைப்பு இருக்கிறது என்றே நம்பினார். அவர் தன்னுடைய    "The secret doctrine"  என்ற புத்தகத்தில் இந்த அமைப்பை பற்றி எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை நான் படித்தது இல்லை. ஆனால், இதில் ஆசிரியர், இந்த ஒன்பது பேர்களில் இருவருக்குள் யார் பெரியவர் என்று  ஒரு சர்ச்சை ஏழும் என்றும் பின் அதுவே ஒரு பெரிய போருக்கு காரணமாக இருக்கும் என்றும் கூறி இருப்பதாக கேள்விபட்டேன். மேலும் அந்தப்போரே இரண்டாம் உலகப்போர் என்று எங்கோ படித்தாக ஞாபகம். அதற்க்கு அவர் தரும் காரணம், ஹிட்லரின் சின்னம் "swastika" மற்றும் யூதர்களின் சின்னம் நட்சத்திரம். இரண்டுமே ஹிந்து மதத்தின் பழம் பெரும் சின்னங்கள். 

          இந்த ரகசிய அமைப்பை பற்றி ஆராயும் சிலர், அசோகர் இந்த அமைப்பை ஆரம்பிக்க வேர் ஒரு காரணமும் இருக்கிறது என்று கூறுகின்றனர். அது 15000 ஆண்டுகளுக்கு முன்னர் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஆயுதங்களால் அழிக்கப்பட்ட ஒரு நகரத்தின் மீதங்களை இவர் கண்டுபிடித்தார் என்றும் அதை அவர் ராமர் ஆண்ட பூமி என்று நம்பினார் என்றும் கூறப்படுகின்றது. அந்த இடத்தை காப்பதும் இந்த ரகசிய அமைப்பின் வேலை என்று கூறுகின்றனர். வேறு சிலர் அப்படி பட்ட இடத்தை அவர் கண்டுபிடித்து இருந்தால்,அது தான் "atlantis" ஆக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த அட்லாண்டிஸ் என்ற இடம் ஒரு பெரிய கண்டம்மாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இருக்க வேண்டும். இதை பல நாட்டு மேதைகளும் பல நூற்றண்டுகலாக தேடி கொண்டு இருக்கின்றனர். இந்த அட்லாண்டிஸ் தான் நம் தமிழ் பாட புத்தகத்தில் வந்த குமரி கண்டம் என்றும் சிலர் கூறுகின்றனர். இப்போதைக்கு இது இன்றைய இந்தோனேசியாவும் அதன் தீவுகளுமே அட்லாண்டிஸ் என்று நம்பப்படுகிறது.

          இப்படிபட்ட ஒரு ரகசிய அமைப்பை பற்றி ஒரு இந்தியர் கூட ஆராய்ச்சி செய்ய வில்லையே என்று நினைக்கும் போதுதான் மனதுக்கு வலிக்கின்றது. இந்த அமைப்பு உண்மையெனில், இன்று இதில் கண்டிப்பாக Dr.A.P.J. அப்துல் கலாம் உறுப்பினராக இருப்பார் என்பது மற்றும் உறுதி. Anyways, இவர்களை பற்றி நான் படித்ததை இங்கே சொல்லி இருக்கிறேன். மேலும் எனக்கு தெரிய வர நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு தெரிந்தவையை எனக்கும் தெரியப்படுத்துங்கள். 



24 comments:

கொழந்த said...

Praveen அவர்களே...
எனக்கு மிகப் பிடித்த விஷயங்கள் இவைகள். உங்கள் பதிவை முழுதாக படிக்கவில்லை என்றாலும் கூட -ஒரு அவசரவேளை இருப்பதனால் - கண்டிப்பா மீண்டும் ஒருமுறை படிக்கணும் போலிருக்கு. படிச்சிட்டு வந்து சொல்றேன்

கொழந்த said...

Word Verificationனை எடுத்து விடுங்க. கமெண்ட் போடுவது சிரமமாக இருக்கு.

உங்களுக்கு Denim Mohan தெரியுமா...அவர் bloglist அப்படியே உங்க ப்ளாகில் இருக்கே...

Praveen said...

என் பலகையை படித்து comment செய்த முதல் நபரான குழந்தைக்கு என் நன்றிகள்.

Praveen said...

@குழந்தை:
எனக்கும் இந்த விஷயங்களில் மிகப் பிடித்தவையே..!!

Praveen said...

@குழந்தை:

"உங்களுக்கு Denim Mohan தெரியுமா...அவர் bloglist அப்படியே உங்க ப்ளாகில் இருக்கே..."

க.க.க.போ..!!

Anonymous said...

//உங்கள் முதல் பதிவே அதிரடியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் நண்பா.நீங்கள் சொன்ன விஷயங்களை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.:-) //

முதல் கமெண்ட் போட்டது நான்யா.... ஆனா தெரியாம முதல் பதிவுலயே போட்டுட்டேன்..

கொழந்த said...

@Praveen
நண்பா...
ரொம்பவே சுவாரசியாமாக இருக்கு உங்க எழுத்து நடை.இதெல்லாத்தையும் இங்கே படித்தீர்கள் @ பிடித்தீர்கள்...

Umberto Eco - Foucault's Pendulum படித்தீருப்பீர்கள் என்று நம்புகிறேன். டான் பிரவுனின் நாவலுக்கெல்லாம் முன்னோடி அவர்-அந்த நாவல் என்று படித்திருக்கிறேன். இந்த விசயங்களை அடிப்படையாக வைத்து எழுதப்படுள்ளது

கொழந்த said...

//இங்கே படித்தீர்கள் @ பிடித்தீர்கள்...//
சாரி..அது எங்கே என்று வர வேண்டும்

Praveen said...

@RNS:

மன்னிக்கவும் நண்பரே.. உங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

Praveen said...

@குழந்த:
என் எழுத்து நடையை ரசிக்கும் நண்பரே, இந்த nine unknown men பற்றி நான் முதலில் படித்தது Talbot Mundy-இன் நாவலில் தான்.

நான் இன்னும் Umberto Eco- வின் புத்தகத்தை படித்தது இல்லை. அவசியம் படிக்கிறேன். அறிமுகம் செய்ததற்கு நன்றி.

மைதீன் said...

புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.
சரி,சரி எல்லோருக்கும் சொல்றத சொல்லிடுறேன்.
எழுத்து நடை நன்றாக உள்ளது.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

/ˈjib(ə)riSH/ said...

@Praveen,

நண்பரே, மிகவும் Interest-ஆக இருந்தது. இது போன்ற ரகசிய குழுக்களை Davinsi Code மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். அப்போதிலிருந்து இவை குறித்துத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது, ஆனால் முயலவில்லை. இப்போது ஓரளவிற்குத் தெரிந்துகொண்டேன்.

நன்றி...

Praveen said...

@ மைதீன்:
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே. புரியாததை தெரிவித்தால் அதைப்பற்றி தெளிவாக எழுத உதவும்.

@ சு.மோகன்:
நண்பரே, பதிவை படித்ததுக்கு நன்றி. எனக்கும் டேன் பிரவுன் தான் இந்த துறையில் ஆர்வத்தை உண்டு பண்ணினார். தொடர்ந்து தெரிந்துகொள்ள முயலுவோம்

எஸ்.கே said...

மிக சுவாரசியமாக உள்ளது. இதுபோல் வரலாற்று மர்மமான விசயங்களை எழுதுங்கள்! நன்றாக இருக்கும்! வாழ்த்துக்கள்! எழுத்து சிறக்கட்டும்!

Praveen said...

எஸ்.கே. அவர்களே, தங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

geethappriyan said...

நண்பா
அட்டகாசமாருக்கு பதிவு,எவ்வளவு எழுதிருக்கீங்க,மிக உபயோகமான பதிவு,இனி தொடர்ந்து வரேன்.

geethappriyan said...

டெம்ப்ளேட் நீட்டா நல்லா இருக்கு நண்பா

Praveen said...

@கீதப்பிரியன்:
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நண்பரே. தொடர்ந்து வாருங்கள்.

GAJENDRAPRABU said...

Dear Mr. Praveen...

I just went to the peak when am reading ur blog really this is great^2 .

I will meet u soon to discuss about these things because am much interested(Meaningful) about all these stuffs.

In ur 9 unknown Men, U have written about atlantis . Atcually there is a Prof. Arysio Santos who is one of the great scientist. In his interview(to TV or magazine) he explained the things about atlantis and he given the clear statement of India and its near by continents are the worlds first people lived area and the next is "Egypt" , he said , Egypt the name's egypt meaning is "HWT-KA-PTAH" which means the scound house of KA. KA is part of the word which means "soul" . Ptah means egyptian God. To put all together Egypt is the god's second house then what is the first one that is india.

And he is given some notes about Alchemists also.

Finally u written that not a single Indian doing a research about this group. Actually (Hopefully) many are doing but not revealing[Now u will have the question "why"] because the guys/girls who are into this research they know that this kind of Human species will end only after 4,26,900 Human years.
May be India will back to the peak in next genarations/ or coming years ...

Thanks

Praveen said...

Hi Gaji,

Thanks for reading my blog. Glad that u find it interesting.

Infact Im thinking of writing an article about atlantis as well. BTW, If really indians are researching about this society, then its well and good. And how did u come up with this number ( 4,26,900 years )dude.

GAJENDRAPRABU said...

Those numbers are from vedic astrology.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த பதிவ பாத்த உடனேயே பாலோயர் ஆயிட்டேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_10.html

நன்றி!

Uthaychand said...

ungal blogkal theriyathathai therinthu kondan.. nanri thalava....... ingal intha postdai ennathu blogkkil poda arvamaka ullathu... ungal pathilai ethiri parnthu kondu irukkiran..thanxs